கனா
ஜனவரி 24ஆம் தேதி! இரவு 8 மணி அளவில் ஏதோ ஒரு நினைப்பில் முகநூலிலைப் புரட்டியப்படி நான். சூரியன் எப் எம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட அதை ஆர்வத்துடன் படித்தேன். உங்கள் குறல் சென்னையின் குறலாக ஒலிக்க ஆசையா ?? என அதிலிருந்ததைப் பார்த்த உடனே திடிரென்று மனதில் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல் சந்தோஷப்பட்டேன். இந்த திடீர் சந்தோஷத்துக்கு காரணம் என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் தான். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது டிவி இணைப்பு வீட்டில் கட் செய்யப்பட்டது. மொபைலில் இரவு 9 மணி அளவில் FM கேட்டுக்கொண்டே ரெக்கார்டு எழுதுவேன். அப்போது நான் விரும்பி கேட்பது லவ் குரு நிகழ்ச்சி தான்.அந் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்க மூன்று விஷயங்கள் காரணமாக இருந்தது. 1. அந்த நிகழ்ச்சி அன்பையும், காதலையும் மையமாக கொண்டது. 2. அதில் படிக்கப்படும் கடிதங்கள் அனைத்திலும் காதலின் வலி அடங்கி இருக்கும். 3. தந்தை-மகள் அன்பு, பிரியமுடியாத நண்பர்களின் பாசம் மற்றும் உறவுகளின் புனிதம் கொண்டவை. நான் என்னையே அறியாமல் லவ் குருவின் வார்த்தையை ரசிக்க ஆரம்பித்தேன். FM-இல் பாடலை ரசிப்பதை விட காத்திருந்து லவ்...